காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள்.சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள்.சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள்.இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.
ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......
அன்பே சுசி !
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.
அ. காதல்
ஆ. என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியல
இ. உண்மையாவா?அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே
2. நீ ஒருநாள் கிளாஸ்ல பாடிக் கொண்டிருந்தப்போ அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன்.நீ உடனே பாடுறதை நிறுத்திவிட்டாய் .அதுக்கு காரணம்:
அ. உன் முன்னால் பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்திச்சு
ஆ. நான் பாடிக் கொண்டிருந்தது உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு பயமா இருந்திச்சு
இ. நீ திடீரென்று உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு
3. உன்னோட சின்ன வயசு போட்டோவை நீ எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தாய்.ஆனால் நான் கேட்டதும் நீ அதை மறைச்சிட்டாய்.அதுக்கு காரணம்:
அ. எனக்கு வெட்கமா இருந்திச்சு
இ. என்னவோ தெரியல.
4. நாங்க சுற்றுலா போனப்போ, ஒரு மேடு ஏறும்போது நானும் என்கூட இருந்த நண்பனும் உனக்கு கை கொடுக்க வந்தோம்.நீ அவனோட கையை பிடிச்சு மேல ஏறி வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்.
ஆ. உன் கையை பிடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது
இ. முதன் முதலில் உன் கையை அப்பிடியா பிடிக்கிறது
5. நீ நேற்று பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருந்தாய்.ஆனா பஸ்ல ஏறல.அதுக்கு காரணம்:
அ. நீ ஏறும்போது ஏறலாம்னுதான்
ஆ. நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை குழப்ப வேணாம் என்று நினைச்சேன்.
இ. உன்னை நினைச்சிட்டு இருந்ததில பஸ் வந்தததை கவனிக்கல
6. எனக்கு ரோஜாப்பூ பிடிக்கும்னு ஒருநாள் சொன்னேன்.அடுத்தநாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சிட்டு வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உனக்குத்தான் ரோஜாப்பூ பிடிக்குமே அதுக்காக
அ. உனக்குத்தான் ரோஜாப்பூ பிடிக்குமே அதுக்காக
ஆ. உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்க வேணாமா
இ. நீ காரணம் கேட்டால் உனக்கு மட்டும்தான் ரோஜா பிடிக்குமான்னு சண்டை பிடிக்கலாம்னு நினைச்சேன்
இ. நீ காரணம் கேட்டால் உனக்கு மட்டும்தான் ரோஜா பிடிக்குமான்னு சண்டை பிடிக்கலாம்னு நினைச்சேன்
7. என் பிறந்தநாள் அன்று காலையில் நான் கோயிலுக்கு வந்தேன்.நீயும் அன்று கோயிலுக்கு காலையில் கோயிலுக்கு வந்திருந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன் பிறந்த நாளன்று உன் கூட சாமி கும்பிடலாம்னு
ஆ. உன் பிறந்தநாளன்று எல்லோருக்கும் முதல் நான் உன்னைப்
பார்க்கணும்னு
பார்க்கணும்னு
இ. உனக்கு கோயிலில் வச்சு வாழ்த்து சொல்லணும்னு
ஆசைப்பட்டேன்.
ஆசைப்பட்டேன்.
இந்தக் கேள்விகளுக்கு நீ எந்தப் பதிலை தெரிவு செய்திருந்தாலும் தப்பில்லை.எல்லா கேள்விகளுக்கும் ஒரு புள்ளி இருக்குது.
அ- இற்கு 10 புள்ளி.
ஆ- இற்கு 5 புள்ளி.
இ- இற்கு 3 புள்ளி.
இந்த கேள்விகளுக்கு நீ வாங்கியிருக்கிற மொத்தப் புள்ளிகள்....
-50 புள்ளிகளுக்கு மேல இருந்தால், "நீ என்னை காதலிக்கிறாய் ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாய்."
-30 இற்கும் 40 இற்குமிடையில் இருந்தால், "உனக்கு என்மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு"
-30 இற்கும் கீழே இருந்தால்,"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.ஆனால், காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாய்."
அ- இற்கு 10 புள்ளி.
ஆ- இற்கு 5 புள்ளி.
இ- இற்கு 3 புள்ளி.
இந்த கேள்விகளுக்கு நீ வாங்கியிருக்கிற மொத்தப் புள்ளிகள்....
-50 புள்ளிகளுக்கு மேல இருந்தால், "நீ என்னை காதலிக்கிறாய் ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாய்."
-30 இற்கும் 40 இற்குமிடையில் இருந்தால், "உனக்கு என்மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு"
-30 இற்கும் கீழே இருந்தால்,"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.ஆனால், காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாய்."
உன்னோட பரீட்சை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
-உன் அன்புக் காதலன்.
இந்த லெட்டரை பார்த்திட்டு எரிச்சலான அந்தப் பொண்ணு , முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் என்று அவன் கொடுத்த மாதிரியே ஒரு பதில் லெட்டர் எழுதிக் கொடுத்தாள்.
1. வகுப்பிலே முதல் வரிசையில யாராவது உட்கார்ந்திருந்தா உள்ளே வாறவங்க அவங்களை பார்க்கிறது சகஜம்.
1. ஆம். 2. இல்லை.
2. பாட்டுப் பாடும்போது, திடீரென்று பாட்டு வரி மறந்து போனால் பாடுறவங்க பாடுறதை பாதியிலே நிறுத்துவாங்கதானே.
1. ஆம். 2. இல்லை.
3. நான் என்னோட சின்ன வயசுப் போட்டோவை என் நண்பிகள் கிட்ட காட்டிக் கொண்டிருந்தப்போ நீ நடுவில வந்து மூக்கை நுழைச்சிட்டாய்.
1. ஆம். 2. இல்லை.
4. சுற்றுலாவில உன் கையைப் பிடிச்சு மேடு ஏறுவதை நான் தவிர்த்தேன்.அது ஏனென்று உனக்கு இன்னும் புரியவில்லை.
1. ஆம். 2. இல்லை.
5. நான் என்னோட தோழிக்காக பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருக்கக் கூடாதா?
1. ஆம். 2. இல்லை.
6. உனக்கு ரோஜா மட்டுமல்ல தாமரை,காலீப்ளவர் கூட பிடிக்கும்னு சொன்னாயே.அது உண்மைதானே?
1. ஆம். 2. இல்லை.
1. ஆம். 2. இல்லை.
7. ஓ அன்று உன் பிறந்தநாளா? அதுதான் கோயில் பக்கம் பார்த்தேனா? நான் தினமும் காலையில் கோயிலுக்கு வருவேன்.அது உனக்கு தெரியுமா?
1. ஆம். 2. இல்லை.
மேலே சொன்ன கேள்விகளில்,
-ஒரு கேள்விக்காவது நீ "ஆம்" என்று சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.
-ஒரு கேள்விக்காவது நீ "இல்லை" என்று சொல்லியிருந்தால் உனக்கு காதலென்றால் என்னென்றே தெரியல.
-ஒரு கேள்விக்காவது நீ "ஆம்" என்று சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.
-ஒரு கேள்விக்காவது நீ "இல்லை" என்று சொல்லியிருந்தால் உனக்கு காதலென்றால் என்னென்றே தெரியல.
-சுசி.
இது எப்புடீ.............?
27 comments:
அடடா, இப்படியும் யோசிக்கிறீங்களோ..
அக்கா
நல்ல நகைச்சுவை
கலந்து
இருக்கிறது பதிவு ..
ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் //
நல்ல நகைச்சுவை ...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..நான் வீட்டுக்கு போறேன் என்னை விட்ருங்கோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
நல்ல காதலன் நல்ல காதலி கறுமம் கறுமம்...
இப்படியொரு நகைச்சுவை போடத் தான் தமிழ்வாசி பேட்டியில் என்னையும் கோத்து விட்டிங்களா ?
ஃஃஃஃஃsiva said...
அக்கா
நல்ல நகைச்சுவை
கலந்து
இருக்கிறது பதிவு ..ஃஃஃஃஃ
ஹ....ஹ... அக்காவா பாவமுங்க கடப்பாகப் போறாங்க...
அவாக்கும் வயது ரொம்ப கம்மி தான்...
ஹ....ஹ... அக்காவா பாவமுங்க கடப்பாகப் போறாங்க...
அவாக்கும் வயது ரொம்ப கம்மி தான்...//
akka romba nallavanga...kadappa ellam aaga maattanga..
நிரூபன் said...
அடடா, இப்படியும் யோசிக்கிறீங்களோ..
படித்ததில் பிடித்தது.
siva said...
அக்கா
நல்ல நகைச்சுவை
கலந்து
இருக்கிறது பதிவு ..
ஆமால்ல.
இராஜராஜேஸ்வரி said...
ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் //
நல்ல நகைச்சுவை ...
ஆமால்ல.
MANO நாஞ்சில் மனோ said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..நான் வீட்டுக்கு போறேன் என்னை விட்ருங்கோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இப்போ விட்டுடுறோம்.மறுபடியும் வந்துதானே ஆகணும்.அப்போ பார்த்துக்குறோம்.
♔ம.தி.சுதா♔ said...
நல்ல காதலன் நல்ல காதலி கறுமம் கறுமம்...
ஆமால்ல.
அதுதானே அந்த கறுமத்த வேண்டாங்கிறது.
சூப்பரு.....!!!! :)
படிக்கறதுக்கு, நல்ல ஜாலி-ஆ இருக்குங்க.. நானா ஒரு பதில் வேற... மனசுல நினச்சு சிரிச்சிட்டு இருக்கேன்..
//1. நீ நம்ம கிளாசுக்கு உள்ளே வரும் போதெல்லாம் நிச்சயம் உன் பார்வை என்மேல விழுகிறது.அதுக்கு காரணம் ://
...இப்படியும் ஒரு ஜந்துவான்னு.. பார்த்தேன்.
அடடா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை போல்
இருக்கிறதே ஒரு சின்ன டிக் அவ்வளவுதானே
முன்பெல்லாம் நாங்கள் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறோம்
படிப்பதற்கு சுவாரஸ்யமான இருக்கிறது..
காதலை எபப்டியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா...
வித்தியாசமான யோசிப்பு..
அந்த ஸ்டார்ஸ் எல்லாம் வர்ற லே அவுட் ஐடியா செம
அப்புறம் தமிழ் மன ஓட்டு விழ மாட்டேங்குது.. வாட் பிராப்ளம்? பாருங்க
எப்பிடியெல்லாம் யோசிகிறாங்கப்பா.உண்மையில எனக்கு முடில இப்பிடி !
Super question and answer . . .
அடடா.இத்தனை நாளா உங்க பதிவு எனக்கு அறிமுகம் ஆகல.இன்றுதான் படித்தேன். Follower ஆயிட்டேன்.
அருமையான் கற்பனை. கலக்கறீங்க..
http://zenguna.blogspot.com
நீங்களும் அந்த பக்கம் போட்டியளா?
வாழ்த்துக்கள்
உங்கட பிறந்த நாள் போஸ்ட் ப்ளாக் ஓபன் ஆகவில்லை
இருந்தாலும் வாழ்த்துக்கள் இருவருக்கும்
வாழ்க வளமுடன்
மதிமூலம் அன்று பார்த்தேன் வரமுடியவில்லை தோழி இன்று தான் உங்கள் பதிவிற்கு வருகின்றேன் .
இப்படி எல்லாம் காதலுக்கு பரீட்சை வைத்தால் தாங்கலாமா? வித்தியாசமான கற்பனை வாழ்த்துக்கள் !
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... உங்களால் மட்டும் எப்படி முடியிது இப்படியெல்லாம் யோசிக்க..
இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் சகோதரி. நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி
நல்ல சுவை , நகைச்சுவை பதிவு.இதுமாதிரியே தொடர்ந்தும் எழுதுங்க.வாழ்த்துக்கள்.
Post a Comment